தேசிய நல்லாசிரியர் விருது: தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர் தேர்வு
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான ஆசிரியர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. நாடு முழுவதும் இருந்து மொத்தம் 48 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் தங்கராஜ் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளார்.