தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை, ஜூலை 24: தமிழகத்தின் வேலூர், ஈரோடு, கரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை 24 முதல் ஜூலை 28 வரை இந்த 8 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகும் வாய்ப்பு உள்ளது.அதே நேரத்தில், தமிழகத்தின் பிற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டியே நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
1.
வேலூர்,2. ஈரோடு,3. கரூர்,4. திண்டுக்கல்,5. மதுரை,6. விருதுநகர்,7. தூத்துக்குடி8. திருநெல்வேலி
ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (ஜூலை 24) முதல் ஜூலை 28ம் தேதி வரை ஆகிய 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.