இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்டு வரும் ‘செயற்கை சூரியன்’ உருவாக்கும் முயற்சி முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் இயற்பியல் ஆராய்ச்சிக்கான ‘பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம்’ செயல்பட்டு வருகிறது. இங்கு அணுக்கரு இணைவு மூலம் ஆற்றலை உருவாக்கும் நோக்கில், காந்தப்புலங்களைப் பயன்படுத்தும் ‘டோகாமாக்’ எனப்படும் கருவியில் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 82.6 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் மற்றும் 400 கிலோவாட் சக்தி கொண்ட உயர் சக்தி வெற்றிட மின்னணு சாதனம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பிளாஸ்மாவை கட்டுப்படுத்தும் பரிசோதனை கருவி உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவே பொதுவாக ‘செயற்கை சூரியன்’ என்று குறிப்பிடப்படுகிறது. விஞ்ஞானிகள் விளக்கமளிக்கையில், இந்த ‘செயற்கை சூரியன்’ நேரடியாக மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையம் அல்ல என்று தெரிவித்துள்ளனர். எஸ்.எஸ்.டி-1 என்பது அணுக்கரு இணைவு தொடர்பான ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சோதனை இயந்திரமாகும். இதில் பயன்படுத்தப்படும் கைரோட்ரான் கருவி, பிளாஸ்மாவை அதிக வெப்பநிலைக்கு கொண்டு சென்று ஆய்வு செய்ய உதவுகிறது. நட்சத்திரங்களுக்கு ஆற்றலை வழங்கும் அணுக்கரு இணைவு செயல்முறையை பூமியில் உருவாக்குவதே இந்த ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கமாகும்.
Advertisement
இலகுவான அணுக்கருக்கள் மிக அதிகமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் ஒன்றிணையும் போது இந்த செயல்முறை நடைபெறுகிறது. இந்தியாவின் இணைவு ஆராய்ச்சிகளில் ஏற்கனவே 200 மில்லியன் டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான பிளாஸ்மா வெப்பநிலை எட்டப்பட்டுள்ளது. உயர் அதிர்வெண் மைக்ரோ அலைகளைப் பயன்படுத்தி கைரோட்ரான் மூலம் பிளாஸ்மா வெப்பப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உலைக்குள் பிளாஸ்மாவை அதிக வெப்பநிலையில் நிலையாக வைத்திருக்க உதவுகிறது. நட்சத்திரங்களில் இந்த செயல்முறையை புவியீர்ப்பு விசை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பூமியில் அணுக்கரு இணைவு ஆராய்ச்சிக்கு காந்தப்புலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய நிலையில் இதன் மூலம் தேவையான அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யப்படவில்லை என்றாலும், தூய்மையான மற்றும் நீடித்த ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் இந்த முன்னேற்றம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கும் அணுக்கரு இணைவு தொழில்நுட்பம் உதவக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள