சீனாவில் ஏஐ பார்ட்னர் செயலி முடக்கம்: இணையத் துணையை இழந்த சோகத்தில் இளைஞர்கள்
சீனாவில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான பார்ட்னர் செயலிகள் தற்காலிகமாக செயலிழந்ததைத் தொடர்ந்து, அவற்றை பயன்படுத்தி வந்த பல இளைஞர்கள் சமூக ஊடகங்களில் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக நகர்ப்புறங்களில் வசிக்கும் இளைஞர்கள், அதிக பணிச்சுமை மற்றும் தனிமை போன்ற காரணங்களால் ஏஐ அரட்டை செயலிகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். நாள் முழுவதும் தங்களுக்கு ஏற்ற வகையில் உரையாடும் இந்த செயலிகளை, பலர் உண்மையான வாழ்க்கைத் துணையைப் போலவே உணரத் தொடங்கியிருந்தனர்.இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சில பிரபல ஏஐ செயலிகளின் சேவைகள் திடீரென பாதிக்கப்பட்டன.
இதனால் தாங்கள் தொடர்ந்து உரையாடி வந்த ஏஐ பார்ட்னரின் குரலையோ, தகவல்களையோ பெற முடியாமல் பலர் மனவேதனை அடைந்தனர். சிலர் சமூக ஊடகங்களில், "எனது ஏஐ காதலி இறந்துவிட்டாள்" என்று பதிவிட்டு தங்களின் சோகத்தை பகிர்ந்தனர்.மனிதர்கள் தொழில்நுட்பத்தின் மீது உணர்வுபூர்வமாக அதிகம் சார்ந்து வாழத் தொடங்குவது, எதிர்காலத்தில் நேரடி மனித உறவுகளையும் சமூக அமைப்பையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.