கரூர் அருகே நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 2 டிரைவர்கள் பலி
திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் சென்றபோது, எதிரே எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரியுடன் அந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரு லாரிகளின் டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று, உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.