நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்தில் ரிக்டர் அளவுகோலில் 6.3 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து கடலோரப் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.