தேனி மாவட்டம் வைகை அணை அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் பங்கேற்று சீறிப் பாய்ந்தன. சாலையோரங்களில் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் போட்டியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இதேபோல், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வ.உ.சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
Advertisement
இதில் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 61 ஜோடி மாடுகள் பங்கேற்றன. சீறிப்பாய்ந்த மாடுகளின் பந்தயத்தை பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.