டில்லி போராட்டத்தில் போலீஸ் தடியடி: லோக்சபாவில் விவாதம் நடத்த ராகுல் காந்தி வலியுறுத்தல்
டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி.யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து லோக்சபாவில் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர் கோரிக்கை வைத்தார்.'நீட்' வினாத்தாள் கசிவை எதிர்த்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றதால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரணியை தடுக்க பாதுகாப்புப் படையினர் பல இடங்களில் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன், தடியடியும் நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.இதையடுத்து, மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவம் குறித்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விவாதிக்க அனுமதி வழங்குமாறு ராகுல் காந்தி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்வு முறையைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்காக போராடும் மாணவர்களிடம் போலீசார் காட்டிய அணுகுமுறை குறித்து சபாநாயகரிடம் எடுத்துரைத்ததாக கூறினார்.