Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

ஒருவர் பெறும் கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும்: கவர்னர் அர்லேக்கர்

ஒருவர் பெறும் கல்வி நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்பட வேண்டும்: கவர்னர் அர்லேக்கர்
கோயம்புத்தூரில் உள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட தீக்ஷாரம்பம் 2026 அறிமுக நிகழ்ச்சியை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அர்லேக்கர் தொடங்கி வைத்தார். 3,500-க்கும் அதிகமான புதிய மாணவர்கள் இதில் பங்கேற்றனர். மேலும், அம்ருதா சர்வதேச சட்டப் பள்ளியின் அம்ருதா லெக்ஸ் இனிஷியோ 2026என்ற முதன்மை விரிவுரைத் தொடரையும் அவர் அறிமுகப்படுத்தினார்.நிகழ்ச்சியில் உரையாற்றிய கவர்னர், கல்வி என்பது பட்டம் பெறுவதற்கோ அல்லது வேலைவாய்ப்பு பெறுவதற்கோ மட்டுமே அல்ல என்று வலியுறுத்தினார். கல்வியின் மூலம் பெறப்படும் அறிவுடன் அதன் பின்னணியில் உள்ள மனிதநேய மற்றும் ஒழுக்க விழுமியங்களையும் மாணவர்கள் புரிந்துகொண்டு, அவற்றை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.மேலும், 'தீக்ஷா'என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் கல்வியைத் தொடங்குவதைக் குறிக்கிறது என்றாலும், 'ஷிக்ஷா' என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் கற்றல் பயணம் எனக் குறிப்பிட்டார். கற்ற அறிவை நடைமுறையில் பயன்படுத்தி, திறன், புதுமை மற்றும் சமூக சேவை ஆகியவற்றின் மூலம் விக்சித் பாரத் 2047 என்ற இந்தியாவின் வளர்ச்சி இலக்கை அடைய மாணவர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஒருவர் பெறும் கல்வி அவரது தனிப்பட்ட முன்னேற்றத்துடன், நாட்டின் வளர்ச்சிக்கும் பயனளிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.இதற்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் பதிவாளர் டாக்டர் பிபின் நாயர் வரவேற்புரை வழங்கினார்.
Advertisement
மாதா அம்ருதானந்தமயி மடத்தின் பொதுச் செயலாளர் சம்பூஜ்ய சுவாமி பூர்ணாம்ருதானந்தபுரி ஆசியுரை வழங்கினார். அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் வேந்தர் சத்குரு ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி காணொளி வாயிலாக மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் ஆசிகளையும் பகிர்ந்தார்.அம்ருதா சர்வதேச சட்டப் பள்ளியின் டீன் டாக்டர் அனில் ஜி. வாரியாத், அம்ருதா லெக்ஸ் இனிஷியோ 2026 குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து, வேளாண் அறிவியல் பள்ளியின் டீன் பேராசிரியர் சுதீஷ், வணிகப் பள்ளியின் டீன் டாக்டர் நவா சுப்பிரமணியம் மற்றும் பொறியியல் பள்ளியின் டீன் டாக்டர் சசங்கன் ராமநாதன் ஆகியோர் உரையாற்றினர்.பொறியியல், வணிகம், சட்டம், இயற்பியல், கணினியியல், செயற்கை நுண்ணறிவு, கலை மற்றும் மனிதநேயம், கட்டிடக்கலை, வேளாண்மை, சமூக மற்றும் நடத்தை அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேர்ந்த மாணவர்களின் கல்விப் பயணத்தின் தொடக்க நிகழ்வாக தீக்ஷாரம்பம் 2026 அமைந்துள்ளது.அடுத்த சில நாட்களில் மாணவர்களுக்காக யோகா, தியானம், உலகளாவிய மனித மதிப்புகள், துறை சார்ந்த அறிமுக அமர்வுகள், ஊக்கமளிக்கும் சிறப்புரைகள் மற்றும் வளாக அறிமுக நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு