உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மெரினா கடற்கரையில் திரண்ட ரசிகர்கள் உற்சாகமாகக் கண்டுகளிப்பு
23வது பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கூடுதல் நேரத்தின் 106வது நிமிடத்தில் பெரன் டொரஸ் அடித்த கோல் தீர்மானமானதாக அமைந்தது. அதன் மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்திய ஸ்பெயின் அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.இந்த இறுதிப்போட்டியை ரசிகர்கள் ஒன்றாகக் கண்டு ரசிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் பிரமாண்ட எல்.இ.டி.
திரை அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஏராளமான கால்பந்து ரசிகர்கள் மெரினா கடற்கரையில் திரண்டு போட்டியை உற்சாகமாகக் கண்டுகளித்தனர்.இருப்பினும், போட்டி ஒளிபரப்பின்போது நெட்வொர்க் சிக்கல் காரணமாக சில நேரங்களில் தடங்கல் ஏற்பட்டது. இதனால் போட்டியை முழுமையாக தொடர்ந்து பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.