அடையாளம் தெரியாத நபரால் தொடர்ந்து தொல்லை: காவல் ஆணையரிடம் மேயர் பிரியா புகார்
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையர் அமல் ராஜை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகாரில், அடையாளம் தெரியாத ஒருவர் தொடர்ந்து தனக்கு தொல்லை அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தன்னை அவதூறாக சித்தரித்து தகவல்கள் பரப்பப்படுவதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனுடன், தனது அலுவலக தொலைபேசி எண்ணுக்கும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து தொடர்ந்து தொந்தரவு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேயர் பிரியா அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அடையாளம் தெரியாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக மேயர் பிரியா காவல்துறையை அணுகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.