Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சமூக நீதி நாள் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று சமூக நீதி உறுதிமொழியை வாசித்தார். இதையடுத்து அமைச்சர்கள் மற்றும் துறை செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். முதல்-அமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக கடந்த 10-ந்தேதி சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை வரவேற்க லண்டனில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். லண்டனில் கடந்த 12-ந்தேதி நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தய போட்டியை முதல்-அமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அவர், தமிழ்நாட்டுக்காக ரூ.15 ஆயிரத்து 300 கோடி அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்த்தார். இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர், லண்டனில் முதல்-அமைச்சர் விஜய் தங்கியிருந்த ஓட்டலில் அவரை சந்திப்பதற்காக ஏராளமான தமிழர்கள் திரண்டனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் அவரை சந்திக்க வந்த ஆயிரக்கணக்கானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Advertisement
சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 8 மணியளவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தின் வி.ஐ.பி. கேட் வழியாக காரில் புறப்பட்ட அவர், நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றடைந்தார். இந்நிலையில், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் தலைமைச் செயலகம் சென்றார். நிகழ்ச்சிக்கு வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு அமைச்சர் மரிய வில்சன், தந்தை பெரியார் எழுதிய புத்தகத்தை வழங்கி வரவேற்றார். தொடர்ந்து சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளை கடைப்பிடிப்பதாக சமூக நீதி உறுதிமொழியை முதல்-அமைச்சர் விஜய் ஏற்றார். அவர் உறுதிமொழியை வாசிக்க, தலைமைச் செயலகத்தில் இருந்த துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு