மீண்டும் வில்லி கதாபாத்திரத்தில் கலக்க தயாராகும் ‘அப்செஷன்’ நடிகை இண்டே நவரெத்
‘அப்செஷன்’ திரைப்படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற நடிகை இண்டே நவரெத், தனது அடுத்த படத்திலும் வில்லத்தனமான மற்றும் அச்சத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய அவர், “‘அப்செஷன்’ திரைப்படம் எனக்கு முக்கியமான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அந்தப் படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியானாலும், நான் ஏற்றிருந்த கதாபாத்திரம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. அதுவே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது” என்றார்.தொடர்ந்து பேசிய இண்டே நவரெத், “விரைவில் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளேன்.
அதில் நான் ஏற்கும் கதாபாத்திரம் ‘அப்செஷன்’ படத்தில் நடித்த வேடத்தை விட இன்னும் கொடூரமானதாகவும், பார்வையாளர்களை பயமுறுத்தும் வகையிலும் இருக்கும். அந்தக் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும்” என்று கூறினார்.இண்டே நவரெத்தின் இந்த அறிவிப்பு அவரது புதிய திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ‘அப்செஷன்’ திரைப்படத்தில் அவரது வில்லத்தனமான நடிப்பை பாராட்டிய ரசிகர்கள், மீண்டும் அதேபோன்ற தீவிரமான நடிப்பை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.