Skip to main content
🌤️ —°C
செவ்வாய் | 18 ஆகஸ்ட் 2026 | 2 ஆவணி பராபவ வருடம்

நிலவரி ரத்து; 20 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க புதிய திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

நிலவரி ரத்து; 20 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க புதிய திட்டம்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
தமிழக சட்டசபையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்த 3.5 லட்சம் காலிப் பணியிடங்களில் 25 சதவீத பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் காலிப் பணியிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். பொதுமக்கள் தங்களது வசிப்பிடங்களுக்கு அருகிலேயே அரசு சேவைகளைப் பெறும் வகையில், சென்னையில் முதற்கட்டமாக ரூ.1.02 கோடி செலவில் 12 சிறுவட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளன.வருவாய்த் துறையின் கீழ் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் விரைவாக வழங்கும் நோக்கில், விண்ணப்பங்களை மூன்று அலுவலர் நிலைகளில் பரிசீலிக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.பட்டா பெயர் மாற்றம் மற்றும் பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் தொடர்ந்து முன்வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதன் அடிப்படையில், பத்திரப்பதிவு செய்யப்பட்டவுடன் தானாகவே பட்டா பெயர் மாற்றம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், கடந்த ஆட்சிக் காலத்தில் 45 சதவீத பதிவுகள் இந்த முறையில் மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.ஏழை மற்றும் எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Advertisement
இதன் மூலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு நன்மை தரும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முதல் நடைமுறையில் இருந்த நிலவரி வசூல், 1436-ஆம் பசலி ஆண்டிலிருந்து ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.மேலும், தமிழ்நாடு நிலச்சீர்திருத்தச் சட்டம் 1961-ன் 37A மற்றும் 37B பிரிவுகளின் கீழ் அரசின் அனுமதி பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.கடலோர மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளை மேம்படுத்துவதற்காக ரூ.3.90 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.அதேபோல், 12,466 கிராம நிர்வாக அலுவலர்களுக்கும், 1,253 குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கும் ரூ.68.63 கோடி செலவில் கையடக்க கணினிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு