சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் பாடுபட்ட இரட்டைமலை சீனிவாசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, “வி தி லீடர்ஸ்” இயக்கத்தின் நிறுவனர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அண்ணாமலை தனது பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் சமத்துவத்துக்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்த முக்கிய முன்னோடிகளில் இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
மேலும், பஞ்சமி நிலங்களை மீட்பதற்காகப் போராடியதுடன், தீண்டாமையை ஒழித்து சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க தொடர்ந்து பாடுபட்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமுதாயச் சிந்தனையாளர், ஊடகவியலாளர், அரசியல் தலைவர் என பல்வேறு தளங்களில் செயல்பட்ட இரட்டைமலை சீனிவாசனின் புகழை போற்றி வணங்குவதாகவும் அண்ணாமலை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.