Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வியாழன் | 03 செப்டம்பர் 2026 | 18 ஆவணி பராபவ வருடம்

இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரியாக சக்தி ஷர்மா புதிய சாதனை

இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரியாக சக்தி ஷர்மா புதிய சாதனை

இந்திய விமானப்படை வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக, ஏர் வைஸ் மார்ஷல் சக்தி ஷர்மா புதிய சாதனையை படைத்துள்ளார். இந்திய பாதுகாப்புப் படைகளில் மருத்துவப் பிரிவைச் சாராத பெண் அதிகாரிகளில், ஏர் வைஸ் மார்ஷல் அல்லது அதற்கு இணையான உயர்ந்த பதவியை எட்டிய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.விமானப்படை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், விமானப்படை தலைமை அதிகாரியின் (கல்வி) உதவி தலைவராக சக்தி ஷர்மா பொறுப்பேற்றுக் கொண்டார்.கடந்த 1994-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி இந்திய விமானப்படையின் கல்விப் பிரிவில் அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய சக்தி ஷர்மா, அதன்பின்னர் பயிற்சி நிறுவனங்கள், களப்பணியிடங்கள், கட்டளை தலைமையகங்கள் மற்றும் விமானப்படை தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் பணியாற்றியுள்ளார்.சக்தி ஷர்மாவின் இந்த சாதனை, இந்திய பாதுகாப்புப் படைகளில் பெண் அதிகாரிகளின் முன்னேற்றப் பாதையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு