விநாயகர் பெருமானின் அவதாரத் திருநாளாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திரண்டு, விநாயகரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல்-அமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், விநாயகர் சதுர்த்தி திருநாளில் அனைவருக்கும் தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நன்னாளில் தொடங்கப்படும் அனைத்து நல்ல காரியங்களும் விநாயகப் பெருமானின் அருளால் வெற்றிகரமாக நிறைவேற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சி, அமைதி, வளம் பெருகவும், புதிய நம்பிக்கைகள் உருவாகவும் வாழ்த்து தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், மக்களின் விருப்பங்கள் நிறைவேறி, அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றிப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.