காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை மந்திரியுமான சுதர்சன நாச்சியப்பன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78. சிவகங்கை மாவட்டம் எரியூர் பகுதியில் வசித்து வந்த சுதர்சன நாச்சியப்பனுக்கு வீட்டில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டிலேயே உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில், கடந்த 2013-ம் ஆண்டு வணிகம் மற்றும் தொழில்துறைக்கான மத்திய இணை மந்திரியாக சுதர்சன நாச்சியப்பன் பதவி வகித்துள்ளார்.