மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே, வட்டாட்சியர் பெயரை கூறி ரூ.3.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கிராம உதவியாளர் முகமது கைது செய்யப்பட்டுள்ளார். மருத்தூர் கிராமத்தில் வண்டல் மண் எடுக்கச் செல்ல வட்டாட்சியர் பெயரை பயன்படுத்தி, கிராம உதவியாளர் முகமது ரூ.3.50 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் ரவிச்சந்திரன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமதுவை நேற்று கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.