மதுரை சென்ட்ரல் தியேட்டர் வளாகத்தில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவிய நிலையில், தியேட்டர் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்கள் தீயில் சிக்கி எரிந்து சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதா என்பது குறித்தும் உறுதியான தகவல் இல்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.