'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

'ப்யூஸ் போன' த.வெ.க. அரசு: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் மின்சாரம் இருந்தபோதிலும் நிலவும் மின்னழுத்தக் குறைபாடு காரணமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்சாரம் விநியோகிக்கப்பட்டாலும் voltage பிரச்சினை உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு, வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஆனால், மின்துறை அமைச்சரோ இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தேவையற்ற அவதூறுகளைப் பேசி வருகிறார். மின்சாரம், ஆவின் பால் விநியோகம் உள்ளிட்ட மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையே முறையாக நிறைவேற்ற முடியாமல் திணறும் ‘ப்யூஸ் போன’ த.வெ.க. அரசு, திசைதிருப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.