பெரியாரின் 148-வது பிறந்த நாள்: படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

பெரியாரின் 148-வது பிறந்த நாள்: படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

பெரியாரின் 148-வது பிறந்த நாள்: படத்துக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை

தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனை அருகே அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவின்படி, இன்று (17.9.2026) வியாழக்கிழமை பெரியாரின் பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற மரியாதை நிகழ்வில், தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி.வெங்கடரமணன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆர்.குமார் ஆகியோரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.