நெல்லை: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசம் - கரும்புகையால் பொதுமக்கள் அவதி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

நெல்லை: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசம் - கரும்புகையால் பொதுமக்கள் அவதி

நெல்லை: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசம் - கரும்புகையால் பொதுமக்கள் அவதி

நெல்லை மாவட்டம் பொதிகை நகர் அருகே, மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹெச்.டி.பி. குழாய்கள் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தன.குழாய்கள் தீப்பற்றி எரிந்ததில் உருவான கரும்புகை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் வரை பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.குறிப்பாக, வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு அவதியடைந்தனர்.தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.