தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தேனி சங்கராபுரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை காண ரசிகர்கள் அதிகளவில் திரண்டதால் கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட துறைகளிலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். மாறுபட்ட கதைக்களங்களை கொண்ட படங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்முட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஓம்’ திரைப்படம், வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேனி சங்கராபுரம் கோவிலுக்கு சென்ற தனுஷ் அங்கு சாமி தரிசனம் செய்தார். அவர் கோவிலுக்கு வந்த தகவல் அறிந்த ரசிகர்கள், அவரை பார்ப்பதற்காக அங்கு திரண்டனர். தனுஷ் கோவிலில் தரிசனம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனிடையே, தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வர இருப்பதாக சமீபகாலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுதொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த சூழலில், தேனி சங்கராபுரம் கோவிலில் தனுஷ் சாமி தரிசனம் செய்தது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.