தூத்துக்குடியில் 18-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Sep 2026 www.thinathulir.com

தூத்துக்குடியில் 18-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு

தூத்துக்குடியில் 18-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் வருகிற 18-ந்தேதி குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாநகரின் குடிநீர் விநியோகத்துக்கான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூர் மற்றும் கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கும் பாதையில் உள்ள கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பராமரிப்பு பணிகள் 18.9.2026, வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.