ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். திருமணத்துக்குப் பிறகு சில ஆண்டுகள் திரைத்துறையில் இருந்து விலகியிருந்த அவர், தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘சண்டக்காரி’, ‘நான் வயலென்ஸ்’ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ஸ்ரேயா இன்று தனது மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.