தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

11 Sep 2026 www.thinathulir.com

தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவை சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ. நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழுவில் உறுப்பினராக கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தனது நியமனம் தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சட்ட விதிகள் ஆய்வுக்குழுவில் தனக்கு உறுப்பினர் பொறுப்பு வழங்கிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நலன் மற்றும் ஜனநாயகத்தின் மாண்பை கருத்தில் கொண்டு, சட்ட விதிகள் தொடர்பான இந்த முக்கிய பொறுப்பை அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் மேற்கொள்வேன் என கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.