கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று திடீரென விலை உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதன் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-ஆகவும், கிராமுக்கு ரூ.225 குறைந்து ரூ.13,950-ஆகவும் இருந்தது.இந்த நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.1,13,920-க்கும், ஒரு கிராம் ரூ.14,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு இன்று ரூ.290 உயர்வு ஏற்பட்டுள்ளது.வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.