சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சட்டமன்றத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் குறைவாக பேசுவதாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் விமர்சனம் செய்ததாக குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த முதல்-அமைச்சர் விஜய், தனது பதிலுரையின் மூலம் எழுப்பப்பட்ட அனைத்து விமர்சனங்களுக்கும் விளக்கம் அளித்ததாக அவர் தெரிவித்தார். மேலும், சிறந்த சிந்தனையாளர்கள் அதிகமாக பேசுவதில்லை என்றும் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார். ஒரு காலத்தில் அடுக்குமொழியில் சிறப்பாக பேசுபவர்களை கவர்ந்து, அவர்களின் பேச்சுத் திறனை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாக்களித்த நிலை இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தற்போது அந்த சூழல் மாறிவிட்டதாகவும் தெரிவித்தார். மக்களுக்கு உண்மையாக சேவை செய்யக்கூடியவர் என யாரை நம்புகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி கிடைக்கும் என்ற நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறினார்.