இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளை முன்னிட்டு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, உரிமைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்துக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த சமூகப் போராளியாக இரட்டைமலை சீனிவாசனை குறிப்பிட்டுள்ளார். மேலும், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும், ‘திராவிட மணி’ எனப் போற்றப்பட்டவராகவும் அவர் தெரிவித்துள்ளார். சமத்துவமும் சமூக நீதியும் நிலைபெற இரட்டைமலை சீனிவாசன் தொடர்ந்து பாடுபட்டதை நினைவுகூர்ந்த கனிமொழி எம்.பி., அவரது நினைவைப் போற்றி வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.