கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

31 Aug 2026 www.thinathulir.com

கைதிகள் வெளியே சென்று வேலை செய்யலாம்: ஜார்க்கண்டில் புதிய திட்டம்

Thinathulir Reporter

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிறையில் உள்ள தகுதியான கைதிகள், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, பகல் நேரத்தில் சிறைக்கு வெளியே சென்று வேலை செய்யும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் கைதிகள் காலை 6 அல்லது 7 மணியளவில் சிறையில் இருந்து வெளியே சென்று பணிபுரியலாம். பின்னர் மாலை 6 மணிக்குள் மீண்டும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.சிறையில் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் கைதிகள் மட்டுமே இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், பணிக்காக வெளியே செல்லும் கைதிகளின் நடவடிக்கைகள் சிறை அதிகாரிகளால்தொடர்ந்துகண்காணிக்கப்படும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக இந்தத் திட்டம் ஜார்க்கண்டில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறை, ஜெய் பிரகாஷ் நாராயண் மத்திய சிறை, ஹசாரிபாக் காசிடிஹ் மத்திய சிறை மற்றும் தும்கா மத்திய சிறை ஆகிய 4 மத்திய சிறைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.