இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இரட்டைமலை சீனிவாசன் தொடர்ந்து போராடியவர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘பறையன்’ இதழை தொடங்கி கல்வி, சமூக முன்னேற்றம், சமத்துவம் மற்றும் உரிமைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பியவர் என்றும் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலை அரசியல் மற்றும் சமூக தளங்களில் வலிமையாக வெளிப்படுத்திய முன்னோடிகளில் இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். சமத்துவம் மற்றும் சுயமரியாதை கொண்ட சமூகத்தை உருவாக்க அவர் ஆற்றிய பணிகள் என்றும் நினைவில் நிலைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசனின் சமூக நீதிக்கான பயணத்தையும் சீர்திருத்தக் கருத்துகளையும் நினைவு நாளில் போற்றுவதாகக் கூறியுள்ள நயினார் நாகேந்திரன், அவரது புகழை வரும் தலைமுறைகளும் தொடர்ந்து நினைவுகூர வேண்டும் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.